உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மக்கள் பொலிஸாரை தாக்க நேரிடும் – முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் பாரிய குற்ற அலைகள் உருவாகியுள்ளதாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கையில் இத்தகைய நெருக்கடியை கையாள போதுமான பொலிஸ் அதிகாரிகள் இருந்தாலும், உயரடுக்கு பாதுகாப்பு கடமைகளுக்காக பலர் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளனர்.

தோற்கடிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

பொலிஸ்துறை அதிகாரிகள் சாதாரண மக்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது தற்காப்புக்காக பொலிஸ்துறையினரை தாக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதம் இன்று.

wpengine

அழைப்புக் கட்டணங்களை குறைக்குமாறு கோரிக்கை ஜனாதிபதியிடம் கோரிக்கை..

wpengine

நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும்

Azeem Kilabdeen