உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மக்ஸ்வெல் இனது சதத்தில் உறைந்த ‘ரொஷான் அபேசிங்க” இற்கு பதிவு தவறியது..

சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 போட்டிகளில் 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸி அணி வெற்றி பெற்றது.

குறித்த போட்டியில் சிறந்த சதத்தினை பூர்த்தி செய்ய க்ளேன் மக்ஸ்வெல் முன்னின்றிருந்தார்.

63 பந்துகளில் ஆட்டமிழக்காது, 145 (6*9,4*14) ஓட்டங்களை குவித்து சாதனை படைத்திருந்தார்.

உலகளவில் அதிகளவு கிரிக்கெட் ரசிகர்களால் பேசப்பட்ட பேசுபொருளாக மக்ஸ்வெல் இனது நேற்றைய கிரிக்கெட் சாதனை அமையப்பெற்றிருந்தது.

இலங்கை கிரிகெட் வர்ணனையாளரான ரொஷான் அபேசிங்கவும் க்ளேன் மக்ஸ்வெல் இனது திறமை குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஆனால், அதில் அவருக்கு போட்டியின் நிலையானது தவறிவிட்டது.

அவர் தனது கருத்தில் கூறுகையில்; “இலங்கையின் மற்றுமோர் ஒருநாள் (ODI) போட்டிகளுக்கான சாதனை முறியடிப்பு” எனக் குறிப்பிட்டுருந்தார்.

எவ்வாறாயினும், நேற்றைய போட்டி ஒருநாள் போட்டியாக இருந்தாலும் அது இருபதுக்கு20 என்பது அவருக்கு மறந்துவிட்டதென்றே தோன்றுகிறது..

அவரால் வெளியிடப்பட்ட ட்விட்டர் செய்தியானது;

888888888876

Related posts

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள்

wpengine

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வு

wpengine

நீர் கட்டணம் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு

wpengine