உள்நாட்டு செய்திகள்

மதூஷூக்கு உதவிய சிவாவைத் தேடி STF வலைவீச்சு.. – மதுஷுடன் நெருக்கமானவர் கைது…

மாகந்துரே மதுஷ் இந்தியா செல்ல உதவியதாகக் கருதப்படும் சிவா என்ற நபரைத் தேடி கொச்சிக்கடைப் பிரதேசத்தில் பொலிஸ் விசேட படையணியினர் பரிசோதானைகளை முன்னெடுத்திருந்த போதிலும் சிவா குறித்தப் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை மட்டக்குளி- மாதம்பிட்டி பிரதேசத்தில் வைத்து ‘அந்தரேவத்தே சாமர’ என்ற நபர் பொலிஸ் விசேடப் படையணியால் இன்று(10) காலை கைது செய்யப்பட்டுள்ளாரென்றும், இவர் மாகந்துரே மதுஷுடன் நெருக்கமானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரைக் கைது செய்யும் போது, இவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் 5 கிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேடப் படையணியினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்கு

wpengine

சர்வதேச விண்வெளி நிலையம் இலங்கை வான்பரப்பினூடாக இலங்கையை கடக்கிறது..

wpengine

2வது டெஸ்டில் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம்

wpengine