Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மன்னம்பிட்டி விபத்தில் சாரதி கைது – தேடுதல் ஆரம்பம்..!

– ரீ.எல்.ஜவ்பர்கான் –

மன்னம்பிட்டியில் நேற்றிரவு இடம் பெற்ற பஸ் விபத்துச் சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதுடன் 42 பேர் காயமடைந்து பொலன்னறுவை  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 8 மணியளவில் தனியார் பஸ் வண்டி மன்னம்பிட்ட கொட்டடி பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 10 பேர் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளதுடன் 42 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவத்தில் சிலர் காணாமல் போயிருக்கலாமென நம்பப்படும் நிலையில், காணாமல் போனோரைத் தேடும் பணிகள் இன்று காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலும், குறித்த பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

88 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…

wpengine

டெங்கு மற்றும் H1N1 தொற்றுகளை கட்டுப்படுத்த சர்வதேசத்திடம்ஒத்துழைப்பு கோருகிறார் ராஜித..

wpengine

இந்தியாவில் விளையாடவுள்ள திஸர

wpengine