ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மர்ம முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சிறுத்தை [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | உடவலவை) – உடவலவை – தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள கால்வாயிலிருந்து கொலை செய்யப்பட்டுள்ள சிறுத்தை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று(02) அந்த உடல் மீட்கப்பட்டுள்ளதோடு, அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

குறித்த சிறுத்தை துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. அதனுடன் சடலம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

அண்மையில் கதிர்காமம் – புத்தல பிரதான வீதியில் பயணித்த தரப்பினர்களை சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனுடன் யால பூங்காவை பார்வையிடுவதற்காக சென்ற தரப்பிரை சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

வேட்பாளர்கள் மூவர் ஒன்றிணைய திட்டம்?; அனுர குமாரவின் அதிரடி ஆரம்பம்

wpengine

தனியார் மயமாகிறது புகையிரத திணைக்களம்..?

wpengine

அமைச்சர்களுக்கு நரம்பு கட்டமைப்பில் தளர்ச்சி

wpengine