உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மலேசியா வேலை மோசடி குறித்து சிஐடி விசாரணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சுற்றுலா விசாவில் மலேசியாவில் வேலை வாய்ப்பு தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றும் கொள்ளையர்கள் குறித்து விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மலேசியாவுக்குள் நுழைந்தவுடன் சுற்றுலா விசாவை பணி விசாவாக மாற்றலாம் என குழுக்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், இவ்வாறான மோசடியாளர்களிடம் ஏமாறுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டு பயணங்களுக்கு முன்னர் பயண முகவரின் நம்பகத்தன்மையை விசாரிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

வாழைத்தோட்டம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ரய்னா கைது…

wpengine

நாடு திரும்பிய 93 இலங்கை மாணவர்கள்

wpengine

உள்ளூராட்சி சபைகளிலுள்ள 8400 பேருக்கு பணி நிரந்தரமாக்கப்படும்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு..!

wpengine