உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை தொடரக் கூடும்…

இலங்கையைச் சூழ காணப்படும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலையும், மேகமூட்டமான நிலையும் மேலும் தொடரக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் வட அரைப்பகுதியில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என தெரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு,வடமத்திய, வடமேல், மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.

Related posts

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தல் ஆரம்பம்

wpengine

சந்திம விஜயசிறி நீதிமன்றில் ஆஜர்..

wpengine

அமைச்சர் கந்தையாவுக்கு யங்கரவாத புலனாய்வு பிரிவு அழைப்பு – அமைச்சர் மறுப்பு…

wpengine