ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்தவின் நிலக்கீழ் மாளிகையும், புதல்வரின் ஆடாவடித்தனங்களும் கிழிந்தன..

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிலத்துக்கு அடியில் ஆடம்பர மாளிகை ஒன்றை நிர்மாணித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலின் போது தகவல் வெளியிட்டிருந்தார்.

முற்றாக ராஜபக்ச குடும்பத்தினரின் தனிப்பட்ட தேவைக்காக கனமாக கொங்கிரீட்டினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நிலத்தடி மாளிகையை நிர்மாணிக்க செலவான தொகை இன்னும் மதிப்பிடப்படவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிலத்தடி மாளிகை தொடர்பான தகவலை வெளியிட்ட பின்னர் மறுப்பு எதனையும் வெளியிடாத மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்திற்காக அதனை நிர்மாணிக்கவில்லை எனவும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே அது நிர்மாணிக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

எனினும் அந்த நிலத்தடி மாளிகை புலிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக நிர்மாணிக்கப்படவில்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் குறிப்பிட்டிருந்தார்.

எது எப்படி இருந்த போதிலும் குறித்த நிலத்தடி மாளிகையில் நாமல் ராஜபக்ச மேற்கொண்ட நடவடிக்கைகளை தாம் கண்டறிந்துள்ளதாக கூறியுள்ள ஊடகம் ஒன்று அது சம்பந்தமான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

 

Related posts

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இராஜினாமா…

wpengine

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

wpengine

வழுக்கி விழுந்து பழைய நினைவுகளை இழந்தார் பிரேசில் ஜனாதிபதி

wpengine