உள்நாட்டு செய்திகள்

மாணவி வித்தியாவின் பாலியல் படுகொலை – இராஜாங்க அமைச்சர் விஜயகலா மீது CID வாக்குமூலம்..

யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பாலியல் படுகொலை வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை காவல்துறையில் பெறுப்பளிக்காது தப்பவிட்டமை தொடர்பில் வாக்குமூலம் அளிக்க நேற்று(09) பிற்பகல் 3 மணியளவில் விஜயகலா குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி நீண்டநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

யாழ்.புங்குடுதீவு பகுதியில் சிவலோக நாதன் வித்தியா படுகொலை தொடர்பில் பிரதான சந்தேகத்திற்குரியவரான சுவிஸ் குமார், பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு மின்கம்பத்தில் கட்டி வைத்திருந்த நிலையில், அவரை தப்பவிடுவதற்கு விஜயகலா மகேஸ்வரன் உதவியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சரிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் இரகசிய காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்த நிலையிலேயே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

லஹிரு வீரசேகர விளக்கமறியலில்…

wpengine

வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை…

wpengine

கப்பலின் பிரதான கெப்டன் காலி துறைமுகத்திற்கு

wpengine