உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின்சாரத்துக்கான தட்டுப்பாடு நிலவும் அபாயம்..

எதிர்வரும் சில வருடங்களில், மின்சாரத்துக்கான தட்டுப்பாடு நிலவக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும், மின்சாரத்துக்கான கேள்வி, 6 சதவீதத்தால் அதிகரித்துக்கொண்டு வருகின்றது.

இருப்பினும், எவ்வித மின்வெட்டும் இன்றி, மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று, மின்சக்தி மற்றும் புதிப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் அபிவிருத்தித் தலைவர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

“நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன், தற்போது இயங்கிவரும் மின்னுற்பத்தி நிலையங்களின் செயற்றிறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க, காலதாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பில், ​இலங்கை மின்சார சபையிடம், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, விளக்கம் கோரியுள்ளது” என, அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

அரச ஊடகப் பேச்சாளர்கள் நியமனம்

wpengine

அரச பஸ் ஊழியர்களுக்கு விசேட சலுகைகள்

wpengine

பிரதமர் தலைமையிலான குழுவினர் காங்கேசன்துறை முகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்…

wpengine