உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின்வலு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கட்டாருக்கு விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கட்டாருக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இலங்கையில் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டார் மன்னர் சேக் தமீம் பின் ஹமாட் அல் தானி அண்மையில் இலங்கைப் பிரதிநிதிகளை அந்நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரியிருந்தார்.

கட்டாரில் பணியாற்றி வரும் இலங்கையர்களின் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த விஜயத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

இன்றைய தினம் அமைச்சர் காஞ்சன உள்ளிட்டவர்கள் கட்டாருக்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளனர்.

இதேவேளை, எரிபொருள் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குவைட் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளுக்கும் இலங்கையின் உயர் மட்ட பிரதிநிதிகள் விஜயம் செய்ய உள்ளனர்.

 

Related posts

அதிக விலையுடைய மருந்து வகைகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை…

wpengine

உரம் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் – இலங்கை உரக் கூட்டுத்தாபனம்…

wpengine

“எழுச்சி பெறும் பொலன்னறுவை” 180 அபிவிருத்தி திட்டம் ஆரம்பம்…

wpengine