Top Story 2உள்நாட்டு செய்திகள்

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிதியமைச்சினால் எரிபொருளுக்கு வரிச்சலுகை வழங்கப்படாவிட்டால் மீண்டும் எரிபொருள் விலையினை அதிகரிக்க வேண்டிய தேவையேற்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்ல பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அந்நிய செலாவணி பிரச்சினையினால் நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக எரிபொருள் கொள்வனவின் போது, அரசாங்கத்தினால் வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும்.

அதிக விலைக்கு கொள்வனவு செய்து, குறைந்த விலையிலேயே நாட்டில் எரிபொருளை விநியோகித்து வருகின்றோம்.

இதனால், மீண்டும் எரிபொருள் கொள்வனவுக்கான நிதி கையிருப்பில் இல்லாது போகும்.

எனவே, அரசாங்கம் வரிச்சலுகை வழங்காவிட்டால் எதிர்காலத்தில் ஒரு லீற்றர் டீசல் 52 ரூபாவாலும், ஒரு லீற்றர் பெற்றோல் 19 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்தால் ஜனாதிபதியினை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கும்..

wpengine

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு குறித்து அரசுக்கு நம்பிக்கையில்லை!

wpengine

ஜூன் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது

wpengine