உள்நாட்டு செய்திகள்வணிகம்

மீண்டும் சீமெந்துக்கு தட்டுப்பாடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சந்தையில் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் தற்போது கட்டிட நிர்மாணத்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சில வர்த்தக நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சீமெந்து விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தற்போது சீமெந்து மூடையொன்று 1,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எவ்வாறாயினும், அதிக விலைக்கு சீமெந்தினை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Related posts

ஜனாதிபதி ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கியமைக்கு கூட்டமைப்பு கண்டனம்

wpengine

பொரளையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…

wpengine

மாத வருமான அடிப்படையில் இலவச சட்ட உதவிகளை வழங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

wpengine