உள்நாட்டு செய்திகள்

மீத்தொட்டமுல்ல மக்களுக்கு ஏற்படும் மேலதிக ஆபத்துக்களை கட்டுப்படுத்த மின் விநியோகம் தடை..

அனர்த்தத்தில் சிக்கியுள்ள மீத்தொட்டமுல்ல மக்களுக்கு ஏற்படும் மேலதிக ஆபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அப்பிரதேசத்திற்கான மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆகவே அப்பிரதேசத்திற்கு மின் பிறப்பாக்கிகள் மூலம் மின் விநியோகிக்கப்படுவதாக குறித்த அந்த அமைச்சு கூறியுள்ளது.

நேற்று(14) பிற்பகல் மீத்தொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் அப்பிரதேசத்திலுள்ள நூற்றுக்கும் அதிகமான வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், உயிர் ஆபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.

மேலும் பல வீடுகள் குப்பை மேட்டுக்குள் புதைந்துள்ள நிலையில் முப்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

(rizmira)

Related posts

மின்சார சபையின் முன்னாள் தலைவருக்கு எதிராக கோப் குழு நடவடிக்கை

wpengine

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீண்டும் நீதிமன்றம் செல்கிறது…

wpengine

தேர்தல் பிரச்சாரங்கள் நாளை நள்ளிரவுடன் நிறைவு – பிரதித் தேர்தல் ஆணையாளர்

wpengine