உள்நாட்டு செய்திகள்

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட நாளை(13) மீளவும் CID முன்னிலையில்…

(FASTNEWS |COLOMBO)- முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை மீளவும் நாளை(13) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு குறித்த திணைக்களத்தினால் பணிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி நேற்று(11) குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி இருந்த முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட 09.00 மணியில் இருந்து 5.00 மணி வரையிலான சுமார் 08 மணி நேர வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக குறித்த திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபரை பெயரிட போதுமான சாட்சியங்கள் உள்ளதாக இதற்கு முன்னர் இரகசிய பொலிசார் நீதிமன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை

wpengine

தண்டப்பணம் 2500 குறித்த யோசனை திரிவுபடுத்தப்பட்டதொன்று – நிதி அமைச்சர்.

wpengine

சிவகரனுக்கு இன்று பிணையில் செல்ல அனுமதி – பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி உறுதி

wpengine