உள்நாட்டு செய்திகள்

மொரட்டுவ கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவ பொலிஸ் பிரிவின் உஸ்வத்த பிரதேசத்திற்குட்பட்ட கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைவாக குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரி பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

wpengine

கீத் நோயர் கடத்தல் சம்பவம் – இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி கைது

wpengine

தம்மிக்க பெரேராவுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி?

wpengine