உள்நாட்டு செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்கள அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன்னர், பொதுமக்கள் இணையம் அல்லது தொலைபேசி அழைப்பின் ஊடாக முன்பதிவு மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

வேரஹெர மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள முக்கிய மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்களுக்கு மட்டும் இருந்த முன்பதிவு வசதி, மாவட்ட அலுவலகங்களுக்கும் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்களுக்கும் செல்வதற்கு முன்னர் நேரத்தை ஒதுக்குவதற்கு இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்றார்.

மேலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்குள் நெரிசல், ஊழல் மற்றும் திறமையின்மைக்கு எதிராக அறிமுகப்படுத்தப்பட்ட முன்பதிவு முறை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

இந்தியா – இலங்கை இடையில் 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

Azeem Kilabdeen

தேசிய முச்சக்கரவண்டி தொழிலாளர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை..

wpengine

இலங்கை – ஜோர்ஜியா நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் இருநாட்டு அரச தலைவர்களும் கவனம்…

wpengine