உள்நாட்டு செய்திகள்

யோஷித உள்ளிட்ட ஐவருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கடுவளை நீதவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.

சீ.எஸ்.என் எனும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்படி இன்று சந்தேகநபர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது இவர்களை தொடர்ந்தும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

களனி பல்கலைக்கழக மருத்துவ பீடம் 14ம் திகதி ஆரம்பம்….

wpengine

பிரதமர் காங்கேசந்துறை விஜயம்…

wpengine

நாட்டில் தேவை ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அறிவுறுத்தல்..!

wpengine