ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரணில் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை?

(FASTNEWS|COLOMBO) -கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளார்.சிங்கள வார இதழொன்றின் செய்தியை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைமையையும், கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து செயற்படும் உறுப்பினருக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் ஆரம்பக்கட்ட செயன்முறையாக கட்சி உறுப்பினர்களிடம் சுய விளக்கம் கோரப்படவுள்ளது .

மேலும், கட்சியின் அனுமதி இல்லாமல் பேரணிகளுக்கான ஏற்பாடுகளை செய்யும் தொகுதி அமைப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் கட்சி தலைமை தீர்மானித்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குமாறுகோரி சஜித் அணி உறுப்பினர்களால் மாவட்டம்தோறும் பேரணிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதமர் இவ்வாறு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என தெரியவருகின்றது.

Related posts

நாமல் குமாரவின் கைப்பேசி ஹொங்கொங் நாட்டிற்கு… விசாரணைகள் தீவிரம்..

wpengine

UNP 100 மில்லியன் ரூபாய்க்கு பேரம் பேசுகிறது

wpengine

புர்கா மற்றும் நிகாப் அணிந்து சென்றால் தண்டப்பணம் அறவிட அரசு உத்தரவு

wpengine