உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரதுபஸ்வல வழக்கிற்கு சட்டமா அதிபர் மூவரடங்கிய நீதியரசர் குழாமினை கோருகிறது

(FASTNEWS | COLOMBO) – ரதுபஸ்வல சம்பவம் தொடர்பில் பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதியரசர் குழாமினை நியமிக்குமாறு சட்டமா அதிபர் நீதியரசரிடம் இன்று(10) கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் கம்பஹா ரத்துபஸ்வல பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இராணுவ குழுவிற்கு பொறுப்பாயிருந்தமை தொடர்பில் பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட நால்வர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சஜித் பெயரிடப்படாவிட்டால்; அமைச்சர்கள் விலக வாய்ப்பு

wpengine

பயங்கரவாத புதிய தடைச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…

wpengine

அரச அதிகாரிகளது ஆடை தொடர்பில் சுற்றுநிரூபம் வெளியீடு

wpengine