Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(01) ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது.

சம்பள பிரச்சினையை முன்வைத்து ரயில் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் பாதுகாவலர்கள் சங்க பிரதான செயலாளர் மனுர பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்புகளுக்கு தீர்வு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு மற்றும் ரயில் தொழிற்சங்கங்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான தீர்வு எவையும் முன்வைக்கப்படவில்லை என இலங்கை ரயில் பாதுகாவலர்கள் சங்க பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

2வது டெஸ்டில் ஹேரத் ஹெட்ரிக் சாதனை (UPDATE)

wpengine

அரசியல் கட்சிகளது செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இடையே சந்திப்பு

wpengine

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள அதிகரிப்பு – பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

wpengine