உள்நாட்டு செய்திகள்

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு ஒத்திவைப்பு…

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(22) உத்தரவிட்டுள்ளது.

பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று(22) நீதிமன்றத்திற்கு வராத காரணத்தினால் குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு பதில் நீதவான் பிரியந்த லியனகே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

பிணைமுறி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பொய் சாட்சி கூறியதாக இரகசிய பொலிஸாரினால், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முகநூல் தடையினை நீக்குமாறு ஜனாதிபதி பணிப்பு…

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் மத்தலையில் தரையிறக்கம்…

wpengine

கணவரின் பெற்றோலை அலுவலக அதிகாரிக்கு தாரை வார்த்த மனைவி

wpengine