ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

லக்ஷ்மன், பௌசி உள்ளிட்ட SLFP 15 பேருக்கு நல்லாட்சியில் அமைச்சுப் பதவிகள் – மைத்திரி இணக்கம்..

(FASTNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அமைச்சர்களாக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பிரகாரம் அமைச்சர்களாக நியமிக்கவுள்ள அக்கட்சி உறுப்பினர்களின் பெயர்களை, ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுதந்திரக் கட்சியினர் சிலரை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளாதாகவும் கூறப்படுகிறது. அதில் விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, லக்ஸ்மன் செனவிரத்ன, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரே அமைச்சர்களாக நியமிக்கப் பரிந்துரைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கம் என்ற அடிப்படையில், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய பரந்துபட்ட கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் 15 பேர் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related posts

ரஞ்சனின் கொக்கேன் வலைவீச்சில் சிக்கிய மற்றும் தப்பியவர்கள் இவர்களா தான்…

wpengine

ஜனாதிபதியின் பயணம் குறித்து வெளியிடப்பட்ட செய்திக்கு செயலகம் மறுப்பு

wpengine

ரவ்டித்தனம் செய்த பிக்குகளை அடித்து நொறுக்கியது போலிஸ்

wpengine