உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக கூறி இராணுவ புலனாய்வு அதிகாரி தற்கொலை (Update).

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக, கொலைக்குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர், அது தொடர்பான கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு நேற்று(14) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரே, இந்தக் கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டவராவார்.

அவர் எழுதிவைத்துள்ள கடிதத்தில், “தெரிந்துகொள்ள வேண்டியவர்கள் தெரிந்துகொள்வதற்காக” என்று தலைப்பிட்டுள்ளார். இக்கடிதம், அவரது காற்சட்டை பொக்கெட்டில் இருந்துள்ளது.

லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாகவும் தன்னுடைய நண்பன் மலிந்த உதலாகம, குற்றவாளி அல்ல என்றும், அவர் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று காலை இலங்கைக்கு அருகில் இந்திய பெருங்கடலில் இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டன..!

wpengine

தமிழ் தேசியக் கூட்டமைப்பை, ரணில் பிளவுபடுத்தி விட்டார் – கருணா..!

wpengine

26 இற்கு பின்னர் சஜித்’தினது பதவியில் மாற்றம் – சிங்கம் ஐ.தே.கட்சிக்கு- சுமணதாஸ ஆரூடம்….

wpengine