உலக செய்திகள்

லண்டன் நகரில் டிராம் பேருந்து தடம் புரண்டதில் இதுவரை ஐவர் பலி.

லண்டன் நகரில் டிராம் பேருந்து ஒன்று தன்னுடைய வழிதட பாதையில் இருந்து தடம் புரண்டு தலைகிழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

டிராம் பேருந்து நசுங்கி விபத்துக்குள்ளானதில் இதுவரை 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான வாகனத்தில் 50-க்கும் அதிகமான மக்கள் பயணம் செய்துள்ளனர்.

தெற்கு லண்டனில் உள்ள முக்கிய ஜங்சன் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிரிட்டீஸ் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related posts

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

wpengine

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 57 பேர் சத்திய பிரமாணம்

wpengine

இஸ்ரேல் – பலஸ்தீனம் விவகாரம் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கருத்தால் மீளவும் சர்ச்சை…

wpengine