உள்நாட்டு செய்திகள்

லஹிரு மற்றும் சுகதானந்த தேரர் ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு..

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோரை எதிர்வரும் 31ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று(26) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவினை மீறி, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கடந்த 10ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமைக்காக குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

நிகவெரட்டிய வன்முறை சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் விளக்கமறியலில்…

wpengine

3ஆவது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி 416 ஓட்டங்களுடன் சுருண்டது

wpengine

பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் திசர பெரேரா கடும் விமர்சனத்திற்கு…

wpengine