உலக செய்திகள்விசேட செய்தி

லிபியா விமானப்படை தளத்தில் தீவிரவாத தாக்குதல் – சுமார் 141 பேர் பலி..

லிபியா விமானப்படை தளத்தில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 141 பேர் பலியாகினர்.

லிபியாவில் 2011-ம் ஆண்டு அதிபராக இருந்த மும்மர் கடாபியின் சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தின் மூலம் அகற்றப்பட்டது.

அதன் பின்னர் ஏற்பட்ட அரசில் குழப்பம் ஏற்பட்டது. தீவிரவாத குழுக்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

ஈராக் எல்-சாடி என்ற இடத்தில் உள்ள விமானப் படை தளம் முதலில் தீவிரவாதிகள் வசம் இருந்தது. அதை அரசு ராணுவம் கடந்த டிசம்பரில் கைப்பற்றியது.

இந்நிலையில் அந்த விமானப்படை தளத்தை கைப்பற்ற தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் 141 பேர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பைடனின் பதவியேற்பின் பின்னர் பழிவாங்கல் தொடரும்

wpengine

ஆஸ்திரேலியா விசாவில் புதிய கட்டுப்பாடு விதிப்பு.

wpengine

Tik Tok உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை

wpengine