உள்நாட்டு செய்திகள்

வடமேல் மாகாண சபையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு….

வட மேல் மாகாணசபையின் பதவிக்காலம் இன்று(10) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதுடன், குறித்த மாகாண சபையின் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு வழங்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் இதுவரையில் வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் 5 மாகாணங்களுக்கான ஆயுட்காலம் முடிவடைந்துள்ளது.

மேலும், இம்மாதம் 25 ஆம் திகதி வட மாகாணத்தினதும் ஆயுட் காலம் நிறைவடையவுள்ளதுடன், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி தென் மாகாணத்தினதும், 21 ஆம் திகதி மேல் மாகாணத்தினதும், செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி ஊவா மாகாணத்தினதும் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாகவும்
தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, மாகாண சபை எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழு அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

wpengine

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள பிரதேசங்கள்

wpengine

UPDATE – உயிரிழந்தோர் எண்ணிக்கை 228 பேர் ஆக உயர்வு

wpengine