உள்நாட்டு செய்திகள்

வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

லொறி ஒன்றுடன் மோட்டார்சைக்கிள் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஜெயமூர்த்தி திசிகாந்தன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குகின்றார்.

சடலம் வவுனியா பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸாரால் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மற்றுமொரு கோர விபத்தில் மூவர் பலி

wpengine

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியின் 2ஆம் கட்ட நடவடிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல்…

wpengine

தேசிய அடையாள அட்டை முறை தொடர்பிலான அறிவிப்பு

wpengine