உள்நாட்டு செய்திகள்

விபத்துக்குள்ளான ஹெலி’யின் ஓட்டுனருடன் தொடர்பு கொண்ட ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு..

நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கச் சென்ற நிலையில் விபத்துக்குள்ளான, ஹெலிகொப்டரின் ஓட்டுனருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்களை கொண்டு செல்ல அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் ஜனாதிபதி இதன் போது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை, குறித்த ஹெலிகொப்டர் காலி – பத்தேகம பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானது.

எதுஎவ்வாறு இருப்பினும், அதில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, விமானப்படை ஊடகப் பேச்சாளர் மேலும் உறுதிப்படுத்தியிருந்தார்.

(rizmira)

Related posts

மது அருந்தி வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 237 பேர் கைது..

wpengine

ஒளடத வலயம் ஸ்தாபிக்க அனுமதி

wpengine

நாட்டில் நிலவும் மதவாத அரசியலை கைவிடுமாறு பிரதமர் கோரிக்கை…

wpengine