உலக செய்திகள்

வியட்நாமின் Da Nang முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  வியட்நாம்) – வியட்நாமின் பிரபல சுற்றுலாத் தளமான டா நங் (Da Nang) பகுதியில் புதிதாக கொவிட் – 19 தொற்றுக்குள்ளான 15 பேர் இனங்காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த முடக்க செயற்பாடுகள் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்து குறித்த பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகளை வெளியேற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக வியட்நாம் அரசாங்கம் தெரிவித்துள்ளது

கொவிட் – 19 தொற்று காரணமாக இதுவரை வியட்நாமில் 446 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 369 பேர் பூரணமாக குனமடைந்துள்ளனர். இதுவரையான காலப்பகுதியில் எந்த வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை

இருப்பினும் கடந்த 3 மாதங்களுக்கு பின்னர் வியட்நாமின் டா நங் (Da Nang) பகுதியில் கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இதனைத் தொடர்ந்து கொவிட் – 19 தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், டா நங் (Da Nang) நகரத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வியட்நாம் அரசாங்கம் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

ஸ்பெயினில் துக்க தினம் அனுஷ்டிப்பு

wpengine

ஒபாமா பதவி விலக இன்னும் 18 மாதங்களே

wpengine

01 அல்லது 02 ஆண்டு காலம் மட்டுமே பிரதமராக இருப்பேன் – மஹாதிர் முகமது…

wpengine