உள்நாட்டு செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் குவைட் தூதரகத்திடம் கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -குவைட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை விசாரணைகளின்றி பொது மன்னிப்பின் அடிப்படையில் அவரகளின் நாட்டிற்கு அனுப்பி வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில், சட்டவிரோதமானமுறையில் தங்கியுள்ள இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தை மே மாதம் 30 ஆம் திகதி  வரை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன குவைட் தூதரகத்திடம்  இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

 

Related posts

தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

wpengine

இரு பிக்குகளை தாக்கிய நபர் விளக்கமறியலில்

wpengine

அரச அச்சக திணைக்களத்திற்கு ஒரு வாரம் பூட்டு

wpengine