உள்நாட்டு செய்திகள்

வெள்ளவத்தை அனர்த்தம் தொடர்பில் கட்டடத்தின் உரிமையாளர் பொலிசில் சரண்..

வெள்ளவத்தையில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் கட்டடத்தின் உரிமையாளர் பொலிசில் சரணடைந்துள்ளார்.

வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள ஐந்து மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பெரும் அனர்த்தம் ஏற்பட்டது.

குறித்த அனர்த்தம் காரணமாக இருவர் உயிரிழந்ததுடன் 21 பேர் காயமடைந்திருந்தனர். மேலும் ஒருவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அந்த கட்டடத்தின் உரிமையாளர் தலைமறைவாகி இருந்தார். எனினும் பொலிஸில் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த உரிமையாளர் இன்று(20) நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

(rizmira)

Related posts

தொழிலாளர்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்

Azeem Kilabdeen

கோட்டாபய உள்ளிட்ட 07 பேரை விஷேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை…

wpengine

அரசியல் முட்டுக்கட்டைக்கு தீர்வுக் காண சமரசம் செய்யுமாறு ஐ.நா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

wpengine