உள்நாட்டு செய்திகள்

வேட்பாளர்கள் – தேர்தல் ஆணைக்குழு நாளை சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் நாளை (14) விசேட சந்திப்பொன்றை தேர்தல் ஆணைக்குழு நடத்தவுள்ளது.

சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல், வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் முடிவுகளை வெளியிடுவது தொடர்பான விடயங்கள் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டால் ஒரு வேட்பாளர் இரண்டு பிரதிநிதிகளை அனுப்ப முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பூதவுடலுக்கு இன்று இறுதிக்கிரியைகள்…

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக A2 வீதி மூடப்பட்டது..

wpengine

மாகாண சபை கலைப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் இவ்வார அமைச்சரவையில் முன்வைப்பு…

wpengine