உள்நாட்டு செய்திகள்

ஹபரகட வசந்தவின் மனைவி கைது…

கடந்த 22 ஆம் திகதி மாத்தறையில் தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் காலை இடம்பெற்ற கொள்ளை சம்பத்தை அடுத்து பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஹபரகட வசந்தவின் மனைவி நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குலசேகர தெரிவித்துள்ளார்.

ஹபரகட வசந்தவின் மனைவி கைது செய்யப்படும் போது அவருடைய ஹோமாகம வீட்டில் துப்பாக்கிச் சூட்டிற்கு பயண்படுத்திய துப்பாக்கி மற்றும் ரவைகள் சில கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது, கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்திகோகஸ்தர் ஒருவர் பலியாகியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொன்சர்வேட்டிவ் கட்சி 326 இடங்களில் வெற்றி

wpengine

முச்சக்கர வண்டிகளில் அலங்காரம் செய்வதற்கு கட்டணம் அறவிடப்படும்..!

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழகமானது தற்காலிகமாக மூடப்பட்டது…

wpengine