(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஹேனமுலல, வெலிகொட பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் த லைவர் ரிஷாத் பதியுதீன் எம்பி இன்று (30) பார்வையிட்டதுன் அவர்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடினார்
அத்துடன் அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவிகளையும் வழங்கினார்.
ரிஷாத் பதியுதீனுடன் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான காலித், சாகர மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் நைஸர் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இந்தப் பிரதேசத்தில் சுமார்
900 குடும்பங்களைச் சேர்ந்த
4,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்