Top Story 2உள்நாட்டு செய்திகள்

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் தற்போது 12 – 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, நெடு நாட்பட்ட நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேல் மாகாணத்தில் உள்ள சகல பிரதான வைத்தியசாலைகளிலும் நேற்று(27) ஆரம்பமானது.

இந்நிலையில், தற்போது ஏனைய மாகாணங்களில் உள்ள 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த பகுதிகளில் நாட்பட்ட நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு முதற் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசியலமைப்பு பேரவையில் முஸ்லிம் பிரதிநிதி: முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine

ஆஸ்திரேலியாவில் முதல் முதலாக முஸ்லிம்களுக்கான கட்சி

wpengine

மருத்துவ சபையில் பதிவு செய்வதற்கான தகைமை

wpengine