கேளிக்கை

12 வருடத்திற்குப் பிறகு விஜய்யுடன் மோதும் சரத்குமார்…

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படமும், சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘மெர்சல்’. அட்லி இயக்கியுள்ள இப்படம் தீபாவளிக்கு உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. அதேதினத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சென்னையில் ஒரு நாள் 2’ படம் வெளியாக இருக்கிறது. முதல் பாகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் இரண்டாக பாகத்திற்கும் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு விஜய் படமும், சரத்குமார் படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

இதற்கு முன் 2005ம் ஆண்டும் விஜய் நடிப்பில் உருவான ‘திருப்பாச்சி’ படமும், சரத்குமாரின் ‘ஐயா’ படமும் பொங்கல் திருநாளில் வெளியாகி இருக்கிறது.

12 வருடத்திற்குப் பிறகு தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘மெர்சல்’ படமும், சரத்குமாரின் ‘சென்னையில் ஒருநாள் 2’ படமும் ஒரே நாளில் வெளியாகிறது.

Related posts

சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய நாயகன் ஸ்டான் லீ காலமானார்…

wpengine

சந்தர்ப்ப சூழ்நிலையால் சினிமாவுக்கு வந்த காஜல் அகர்வாலின் உண்மையான இலட்சியம்…

wpengine

‘ஜகமே தந்திரம்’ ஒரு பார்வை

wpengine