உள்நாட்டு செய்திகள்

200 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்த 200 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலையை ஒருபோதும் குறைக்கப் போவதில்லை என பிரீமா நிறுவனம் நாட்டின் ஏனைய கோதுமை மா விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளது.

கடந்த 05 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலையை 05 ரூபாய் 50 சதத்தினால் அதிகரிக்க பிரீமா மற்றும் செரன்டிப் நிறுவனங்கள் தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைக்க தீர்மானம்

News Editor

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு..

wpengine

இலங்கை டெலிகொம் நிறுவன தலைவர் இராஜினாமா

wpengine