உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்வணிகம்

2019ம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டத்திற்கு அபிப்பிராயம் கோரப்படுகின்றது…

2019ம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டமானது நவம்பர் மாதம் 5ஆம் திகதி நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

இதை மக்களின் வரவு செலவுத் திட்டமாக மாற்றும் எதிர்பார்ப்புடன், பொதுமக்களின் அபிப்பிராயத்தை பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக தொழில் வல்லுனர்கள், உற்பத்தியாளர்கள், விவசாயத்துறையில் ஈடுபடுபவர்கள், தனிநபர்கள், பொதுமக்கள் என அனைவரும் தமது அபிப்ராயங்களை தெரிவிக்க முடியுமெனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, வரவு செலவுத்திட்டம் தொடர்பான அபிப்பிராயங்களை ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

பணிப்பாளர் நாயகம்,
வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களம்
நிதியமைச்சு, மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு
பொதுசெயலாளர் அலுவலகம் – கொழும்பு- 01

இது தொடர்பான மேலதிகத் தகவல்களை Prasangika.hg@tipd.treasury.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாமெனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மஹிந்தவின் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட ஸ்ரீ.சு.க. உறுப்பினர்கள் தொடர்பில் கலந்துரையாடல்..

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று முதல் மேலதிக அதிகாரம்

wpengine

அரச கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி எஸ்.பீ’க்கு..

wpengine