உள்நாட்டு செய்திகள்

2800 குடும்பங்களுக்கு பழைய இருப்பிடங்களில் வசிக்கத் தடைவிதிப்பு

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பத்து மாவட்டங்களில் வசித்த 2800 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீண்டும் அவர்களது பழைய இருப்பிடங்களில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மக்களுக்கு அங்கு வசிப்பதற்கான தடையினை தேசிய கட்டிட ஆய்வுநிலையத்தின் நிலச்சரிவு ஆராய்ச்சி மற்றும் இடர் மேலாண்மை பணிப்பாளர்ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் கேகாலை மாவட்டத்தில் 1762 குடும்பங்களும்,கண்டியில் 652,இரத்தினபுரி230,நுவரெலியாவில் 114,மாத்தளையில் 42,குருநாகலில் 31,காலி 15, மற்றும்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் 15 குடும்பங்களும் இவ்வாறு தமது பழைய வாழ்விடங்களை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பதுளை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 661 இடங்களில் மண்சரிவு தொடர்பான ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்தவோ, கூட்டு எதிர்க்கட்சியினரோ அபயராம விகாரையில் அரசியல் கூட்டங்கள் நடத்த தடை

wpengine

உண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும் – சாணக்கியன்..!

wpengine

ஸ்ரீ ஜயவர்த்தனபுர விபத்து தொடர்பில் விசாரணை

wpengine