உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதிக்கு விசேட சர்வதேச விருது..

சிறுநீரக நோய்களுக்காக விசேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பினால் ஜனாதிபதிக்கு சிறப்பு விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறுநீரக நோயை தடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கையை அங்கீகரிக்கும் வகையில் குறித்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் நேற்று(19) மாலை இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதிக்கு இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறுநீரக நோய்களுக்காக விசேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பின் தலைவர் பேராசிரியர் Adeera Levin என்பவரினால், ஜனாதிபதிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது இலங்கையில் சிறுநீரக நோயை தடுப்பதற்கு உதவிய வைத்தியர்கள் உட்பட அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

2018ம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பெறுபேறுகள் அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர்…

wpengine

உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்.

wpengine

வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen