உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்தும் சைனோபாம் இரண்டாம் செலுத்துகை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 22,501 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை வழங்கப்பட்டுள்ளதுடன் 26,810 பேருக்கு முதலாம் செலுத்துகையும் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இதுவரையில் 1,390,126 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதலாம் செலுத்துகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 339,932 பேர் இரண்டாம் செலுத்துகையை பெற்றுள்ளனர்.

இதற்கிடையில் 2,426 பேருக்கு நேற்று ஸ்புட்னிக – வி தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை வழங்கப்பட்டுள்ளதோடு இதுவரையில் 6,116 பேர் இரண்டாம் செலுத்துகையை பெற்றுள்ளனர்.

அத்துடன் 64,986 பேருக்கு இதுவரையில் ஸ்புட்னிக் – வி தடுப்பூசி முதலாம் செலுத்துகை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன் நிறைவு…

wpengine

சம்பிக்கவின் கைது ஜனநாயக மரபுகளுக்கு முரணானது

wpengine

JVP இனது தேர்தல் அபேட்சகர்களுக்கான தேசிய மாநாடு இன்று …

wpengine