Top Story 2Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொழும்பை குறிவைக்கும் ‘டெல்டா’

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அண்மையில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட 18 பேரில் 11 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக, கொழும்பு மாநகரசபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஐந்து பேர் கெத்தாராம விளையாட்டரங்கில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்கள்.

இரண்டு பேர் தெமடகொடையிலும் இரண்டு பேர் வட கொழும்பிலும் உள்ளவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா திரிபுடனான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதன்படி நாட்டில் டெல்டா திரிபுடன் கூடிய 36 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

பயணத்தடையில் தளர்வு

wpengine

பா.டெனீஸ்வரனின் பதவியினை மீள வழங்குமாறு விக்கிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…

wpengine

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று சி.ஐ.டிக்கு

Azeem Kilabdeen