உள்நாட்டு செய்திகள்

மேலும் 63 வாகனங்கள் பறிமுதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 63 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 60,288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் மேல் மாகாணத்துக்குள் பிரவேசித்த 641 வாகனங்களில் பயணித்த 1,128 பேர் சோதனையிடப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 500 வாகனங்களில் பயணித்த 901 பேரும் காவல்துறையினரால் சோதனையிடப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

தாக்குதலுக்கு உள்ளான மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வைத்தியசாலையில் அனுமதி (Update)

wpengine

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடைக்கால இழப்பீட்டு தொகையை பெற்று கொண்ட இலங்கை..!

wpengine

ஜக்ஷன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine