Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இம்மாத சம்பளத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தினால் ஆசிரியர் அதிபர்களின் வேதன முரண்பாட்டினை முழுமையாக தீர்ப்பத்தில் சிக்கல் உள்ளது.

இதனால் அடுத்த பாதீட்டின் மூலம் அவர்களது வேதன முரண்பாட்டினை கட்டம் கட்டமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ரமேஸ் பத்திரன மேலும் தெரிவித்தார்.

Related posts

மேலும் 17 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine

உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவுக்கு…

wpengine

கோட்டாபய ராஜபக்ச அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் காற்சட்டையை கழற்றியுள்ளார்!

wpengine