Top Story 3உள்நாட்டு செய்திகள்

மகேந்திரனின்றி வழக்கை முன்னெடுக்க கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது வெளிநாட்டில் உள்ளதாகக் கருதப்படும் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான கார்திய புஞ்சிஹோ ஆகிய பிரதிவாதிகளின்றி மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கை முன்னெடுத்துச் செல்ல அனுமதியளிக்குமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றிடம் சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

இந்த வழக்கு இன்று, நீதிபதிகளான சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொட்டவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகியோரடங்கிய ஆயத்தின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான அஜஹான் கார்திய புஞ்சிஹோ 2015 பெப்ரவரி மாதத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

wpengine

நாட்டு நிலையைப் புரிந்து கொள்ளாத கல்வி அமைச்சராலும், அதிகாரிகளாலும் பாடசாலை நடத்துவது தொடர்பில் குழப்பமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. – இம்ரான் எம்.பி

News Editor

ரயில் சேவைகள் தொடர்பிலான அறிவிப்பு

wpengine