Top Story 1உள்நாட்டு செய்திகள்

மின்வெட்டுக்கான சாத்தியம் இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு மத்தியில், நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று(29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த விவாதத்தில் சபாநாயகர் மற்றும் அவைத்தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரும் தலையிட்டனர்.

வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் இன்று 6ஆவது நாளாகவும் நடைபெற்றுவரும் நிலையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்களின் செலவினத் தலைப்புகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

விசேட சுற்றிவளைப்பில் 40 பேர் கைது…

wpengine

மாஹோ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு விழிப்புணர்வு சிரமதானம்

wpengine

பாராளுமன்றத்தை அண்டியுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டு…

wpengine