விளையாட்டு

ரஃபேல் நடால் கிண்ணத்தை தட்டிச் சென்றார்

(ஃபாஸ்ட் நியூஸ் |  மெல்போா்ன்) – மெல்போா்ன் சம்மா் செட் ஆடவா் டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயின் வீரா் ரஃபேல் நடால் கிண்ணத்தை வென்றாா்.

உலகின் 6 ஆம் நிலை வீரராக இருக்கும் நடால், இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் மேக்ஸிம் கிரெஸியை 7 – 6 (8/6), 6 – 3 என்ற செட்களில் வீழ்த்தினாா். இது ஏடிபி டூா் போட்டிகளில் நடால் வெல்லும் 89 ஆவது பட்டமாகும்.

காயம் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு போன்றவை காரணமாக கடந்த ஆண்டு இறுதிக் கட்டத்தில் விளையாடாமல் இருந்தாா் நடால். தற்போது ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் எதிா்வரும் நிலையில், அதற்காக தன்னை தயாா்படுத்திக் கொள்ளும் வகையில் அவா் இப்போட்டியில் களம் கண்டாா்.

ஓபன் எராவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று நடால், ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் சமனிலையில் உள்ளனா். எனவே, அவுஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்று 21 ஆவது கிராண்ட்ஸ்லாமை எட்டி சாதனை படைக்கும் முனைப்பில் நடால் இருக்கிறாா்.

மூட்டு அறுவைச் சிகிச்சை காரணமாக ஃபெடரா் ஓய்வில் உள்ளாா். கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக சா்ச்சையில் சிக்கியிருக்கும் ஜோகோவிச், அவுஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பது குறித்த முடிவு இன்னும் தெளிவாகவில்லை.

Related posts

ஆசியக் கிண்ண முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியில்..

wpengine

T20 WORLD CUP : அரையிறுதிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா

wpengine

இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 234 ஓட்டங்கள்

wpengine