உள்நாட்டு செய்திகள்

சீனாவின் அக்கறை ஆபத்தானது!

சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சீன அமைச்சர்களுக்கு அவர்களின் நாட்டில் வேலைகள் இல்லை என்பது போலவே தெரிகின்றது. வாரம் ஒருமுறை எவராவது இங்கு வந்துவிடுகின்றனர். அவ்வளவு பெரிய நாட்டில் இருந்து அவர்கள் இங்கு வருவதன் பின்புலம் பற்றியும் ஆராய வேண்டும்.

சீனாவின் வெளிவிவகார அமைச்சரை வரவேற்க எமது நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் சென்றார். வெளிவிவகார அமைச்சர் செல்லவில்லை. தனிப்பட்ட தேவைகளின் நிமித்தமான கொடுக்கல் – வாங்கல்களுக்காகவே அவர்கள் வருகின்றனர். அதனால்தான் இங்கும் தனிப்பட்ட ரீதியில் வரவேற்பளிக்கப்படுகின்றது.

Related posts

முன்னாள் அமைச்சர் ரோஹிதவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல்

wpengine

கொம்பனி வீதி பகுதியில் போக்குவரத்து மட்டு…

wpengine

தேசபந்து தென்னகோனை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை!

Azeem Kilabdeen